BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
“கூட்டணி என்றால் அடிமைகள் இல்லை” - ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திமுகவிடம் கடுமை காட்டுகிறதா விடுதலைச் சிறுத்தைகள்?
திமுகவின் கூட்டணி கட்சியான விசிக, திமுகவிடமிருந்து மாறுபட்ட நிலைபாட்டை எடுக்கும் நிலையில், அது இயல்பு என்று விசிக கூறுகிறது. ஆனால், அது மட்டுமே உண்மையாக இருக்க முடியாது என பலர் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம் அமெரிக்காவைக் கோபமடையச் செய்யுமா?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரண்டுநாள் பயணமாக ரஷ்யா சென்றிருப்பது மேற்கத்திய நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும் மீறி இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியது, இந்தத் தடைகளை நீர்த்துப்போகச் செய்தது என்ற பார்வை நிலவிவரும் நிலையில், மோதியின் இந்தச் சந்திப்பு சர்வதேச அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
அபிஷேக் சர்மா: யுவராஜ் சிங் உருவாக்கிய வீரர் சிக்சர்களை பறக்கவிடும் ரகசியம்
கொரோனா பரவல் காலத்திலிருந்து அபிஷேக் சர்மாவுக்கு துணையாக இருந்து பேட்டிங்கில் பயிற்சி அளித்து, அவரின் பேட்டிங்கை செம்மைப்படுத்தி, குடும்பத்தாரில் ஒருவராக யுவராஜ் இருந்து வருகிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இதுவரை நடந்தது என்ன?- 8 முக்கியத் தகவல்கள்
அ.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்பு, அக்கட்சியின் வாக்குகளைப் பெறப் பா.ம.க - நாம் தமிழர் கட்சி இடையே நிலவும் போட்டி, தேர்தல் சமயத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகப் பிரசாரம் செய்யாதது, அ.தி.மு.க இல்லாமல் மும்முனைப் போட்டி என பல விஷயங்கள் நடந்துள்ளன.
பிரதமர் மோதி ரஷ்யா சென்றிருப்பது சீனாவுக்குப் பதிலடி கொடுக்கவா?
பிரதமர் நரேந்திர மோதி ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு மோதியின் முதல் இருதரப்பு வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். எனவே, பிரதமர் மோதியின் இந்த ரஷ்யப் பயணம் பல வழிகளில் முக்கியமானது. இந்நிலையில் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான நிபுணர்கள் பலரும் இந்தப் பயணத்தின் நேரம் குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அதிர்ச்சி முடிவுகள் - குழப்பமான சூழலால் பல இடங்களில் வன்முறை
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில், தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சி முன்னிலையில் இருந்த நிலையில், இறுதி முடிவில் இடதுசாரி கூட்டணியான புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
டைனோசருக்கு 4 கோடி ஆண்டுக்கு முன் பூமியில் நடமாடிய ராட்சத உயிரினம் - விஞ்ஞானிகளை வியக்கவைத்த புதிய கண்டுபிடிப்பு
பூமியில் முதல் டைனோசர்கள் தோன்றுவதற்கு 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவிர வேட்டையாடும் விலங்கு சதுப்பு நிலங்களில் வாழ்ந்திருக்கிறது.
நீட் : ஆயிரக்கணக்கான இந்திய மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளை நாடுவது ஏன்?
2022 ஆம் ஆண்டில் 7,50,365 மாணவர்கள் கல்விக்காக இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். முந்தைய ஆண்டை விட இது 69 சதவீதம் அதிகம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுக்ரேனில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் - என்ன காரணம்?
குறைபாடுகளுடன் பிறந்த டெட்டியானாவின் மகன் சுவாசிக்கவும் சாப்பிடவும் மருந்துகளை பெறவும் மின்சாரத்தால் இயங்கும் மருத்துவ உபகரணம் தேவை. “நாங்கள் மின்சாரத்தை மிகவும் சார்ந்திருக்கிறோம். இந்த கொடூரமான போர் இல்லையென்றாலும் வாழ்க்கை மோசமாக இருந்திருக்கும், ஆனால், எங்களால் சமாளித்திருக்க முடியும்” என டெட்டியானா பிபிசியிடம் தெரிவித்தார்.
காணொளி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?கால அளவு, 7,27
ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. மும்முனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு விதத்தில் வாக்காளர்களை அணுகுகிறார்கள். ஆனால், களம் யாருக்குச் சாதகமாக இருக்கிறது?
இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிகள் செய்யக் கூடாதவை என்னென்ன?
கர்ப்ப காலத்தில் முன்கூட்டியே கண்டறியப்படாத இத்தகைய இதய நோய்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, ஐ.சி.எம்.ஆர்-யின் இந்த ஆராய்ச்சி உதவும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியில், கர்ப்ப காலத்தில் இதய நோய்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுத்தல், முன்கூட்டியே இதய நோய்களை கண்டறிதல் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை ஆராய உள்ளது.
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை எப்படி நடந்தது? உடனிருந்த அண்ணன் வீரமணி கூறியது என்ன?
செய்தியாளர்களிடம் பேசிய ஆம்ஸ்ட்ராங்கின் அண்ணன் வீரமணி, "என்னை வெட்டியதையும் பொருட்படுத்தாமல், தம்பியை நோக்கி ஓடிச் சென்று பார்த்தேன். அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்" என்று கூறினார்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
சிறப்புப் பார்வை
காஷ்மீர் பிரச்னை மற்றும் இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து பிரிட்டனின் புதிய பிரதமர் கூறியது என்ன?
காஷ்மீர் பிரச்னையில் தொழிலாளர் கட்சி எடுத்திருந்த நிலைப்பாட்டால் பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் அக்கட்சியின் மீது கோபமாக இருந்தனர். அவர்களைச் சமாதானப்படுத்த தொழிலாளர் கட்சியினர் என்ன செய்தனர் தெரியுமா?
தமிழ்நாட்டில் தொடரும் முக்கியப் பிரமுகர்களின் கொலைகள் - என்ன நடக்கிறது? திமுக கூறுவது என்ன?
திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மர்ம மரணம், சேலம் அ.தி.மு.க. பிரமுகர் கொலை, தலைநகர் சென்னையில் பிஎஸ்பியின் மாநிலத் தலைவர் கொலை என முக்கியப் பிரமுகர்களின் கொலைகள் தொடர்கின்றன. இது தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்தப் பிரச்னை குறித்து தி.மு.க. கூறுவது என்ன?
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா மூலம் கள்ளச் சாராயத்தை முழுமுற்றாக ஒழிக்க முடியுமா? சவால்கள் என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிர்ப்பலியை அடுத்து, அதனைத் தடுக்கும் வகையில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'முற்போக்கான' தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகள், தாக்குதல்கள் தொடருவது ஏன்?
காதல் திருமணம் செய்து வைத்ததற்காக சில நாட்களுக்கு முன்பாக திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பாக சென்னையிலேயே ஒரு ஆணவக் கொலை நடைபெற்றது. இந்த வாரம் மதுரையில் ஒரு ஆணவக் கொலை நடந்திருக்கிறது. தமிழ்நாட���டில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக் காரணம் என்ன?
பாகிஸ்தான்: மூடப்பட்ட முதல் தாய்ப்பால் வங்கி - மதகுருக்கள் அனுமதி மறுப்பதன் முழு பின்னணி
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பட்டியலில் பாகிஸ்தான் ஐந்தாம் இடத்தில் உள்ளது. யுனிசெஃப் கூற்றுப்படி, தெற்காசியாவிலேயே அதிக குழந்தை இறப்பு விகிதம் இங்கு உள்ளது. இருந்தும் இங்கு தாய்ப்பால் வங்கி அமைக்க மதகுருக்கள் அனுமதி மறுப்பது ஏன்?
அயோத்தி: பல கோடி செலவில் நடந்த கட்டுமானப் பணிகள் முதல் மழைக்கே சேதமடைந்ததன் பின்னணி
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட நகர வளர்ச்சிக் கட்டுமானங்கள் முதல் மழைக்கே மோசமாகச் சேதமடைந்துள்ளன. அவற்றுக்காகப் பல கோடி ரூபாய் செலவழித்தும் ஏன் இந்த நிலை என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வங்கதேசம்: கண்ணாடி விரியன் பாம்புகளைக் கொல்ல படையெடுக்கும் மக்கள் – ஏன்? என்ன நடந்தது?
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக கண்ணாடி விரியன் பாம்புகள் குறித்த அச்சம் அதிகளவில் பரவி வருகின்றன. இதனால், கண்ணில் படும் பாம்புகளை எல்லாம் மக்கள் அடித்துக் கொல்கின்றனர். என்ன நடந்தது?
‘அவன் என் பேரன்’ - முதுமலை முகாமில் இறந்த குட்டி யானையை நினைத்து நெகிழும் பாகன்
கோவை மண்டலத்தில் தாயை இழந்த மூன்று குட்டி யானைகளை, முகாமில் வைத்து தாய் போல அரவணைத்து வனத்துறையினர் வளர்த்து வந்தனர். இருப்பினும் வயிற்றுப்புண் காரணமாக அவற்றில் ஒரு குட்டி யானை மரணித்துள்ளது. முகாமில் பிபிசி குழு கள ஆய்வு மேற்கொண்டது.
ரா. சம்பந்தன்: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்
மூன்றரை தசாப்த அரசியல் அனுபவத்தைக் கொண்ட இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தன், தனது 91வது வயதில் காலாமானார்.
மகிழ்ச்சி தொழிற்சாலை: பிள்ளைகளுக்காக 'சிறைவாசத்தை' அனுபவிக்கும் தென் கொரிய பெற்றோர்கள்
இங்கு உள்ளவர்களின் பிள்ளைகளைப் போன்று தனிமையில் வாழும் இளம்வயதினர், ஹிகிகோமோரி என அழைக்கப்படுகின்றனர், இந்த வார்த்தை ஜப்பானில் 1990களில் இப்படி தீவிரமாக சமூகத்திலிருந்து விலகி வாழும் இளம்வயதினரை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தபின், ஒன்றாகக் கருணைக்கொலை செய்துகொண்ட தம்பதி - நெகிழ்ச்சிக் கதை
தம்பதிகளான எல்ஸ் மற்றும் ஜான் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஜூன் தொடக்கத்தில், அவர்களுக்கு இரு மருத்துவர்கள் மரணத்தை ஏற்படுத்தும் கொடிய மருந்தை கொடுத்தனர். அதன் பின்னர் அவர்கள் ஒன்றாக இறந்தனர். நெதர்லாந்தில், இதனை இரட்டை கருணைக்கொலை (duo-euthanasia) என்கின்றனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்
காணொளி
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்