தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar : ஆன்லைன் மோசடி வழக்கு.. சவுக்கு சங்கரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு!

Savukku Shankar : ஆன்லைன் மோசடி வழக்கு.. சவுக்கு சங்கரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு!

Divya Sekar HT Tamil
Jul 09, 2024 03:03 PM IST

Savukku Shankar: சவுக்கு சங்கரிடம் விசரணை நடத்த 9 நாட்கள் காவல் துறை கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ஆன்லைன் மோசடி வழக்கு.. சவுக்கு சங்கரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு!
ஆன்லைன் மோசடி வழக்கு.. சவுக்கு சங்கரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு!

ட்ரெண்டிங் செய்திகள்

ஆன்லைன் மூலம் வருமானம் 

சென்னையை சேர்ந்த விக்னேஷ் இவர் யூடியூபர் சவுக்கு சங்கரின் சவுக்கு மீடியா யூடியூப் சேனலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், கரூரில் பிரியாணிக்கடை நடத்தி வரும் கிருஷ்ணன் என்பவருக்கும் ஆன்லைன் விளம்பரம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்ட இருவரும் பேசி உள்ளனர்.இந்த நிலையில், கடந்த 15.10.23 ம் தேதி ஈரோடு சென்ற விக்னேஷ், கரூரில் உள்ள கிருஷ்ணனுக்கு தொடர்பு கொண்டு, தான் ஈரோட்டில் இருப்பதாகவும், 16.10.23 தேதி கரூர் வருவதாகம் ஆன்லைன் வர்த்தகத்திற்கு ரூ 7 லட்சம் ரெடியாக வைக்குமாறு கூறியுள்ளார்.

ஆபாச வார்த்தையில் பேசி தாக்குதல்

அதன்படி, கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் படிக்கட்டுத் துறை ராஜா ஆகிய இருவரும் கடையில் இருந்த போது, அங்கு வந்த விக்னேஷ் கிருஷ்ணனிடம் ரூ.7 லட்சத்தை பெற்றுக் கொண்டு, இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் இந்த பணத்தில் லாபம் ஈட்டி இரு மடங்கு தருவதாக கூறி சென்றுள்ளார்.

பின்னர், பல மாதங்கள் கடந்தும் அவர் கூறிப்படி ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்ட. மேலும், வாட் ஆப் காலில் போன் செய்தால் எடுப்பதும் இல்லை. வேறு எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு பேசிய போது, பணத்தை திருப்பி தர முடியாது என கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 05-06-24 விக்னேஷ் கரூர் ��ந்ததை அறிந்து அவரிடம், பணத்தை திருப்பி கேட்ட போது, ஆபாச வார்த்தையில் பேசி கீழே இருந்த கல்லை எடுத்து தாக்கினார். இதில், காயமடைந்த கிருஷ்ணன் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

யூடியூபர் சவுக்கு சங்கரிடம் கொடுத்த பணம்

இந்த நிலையில், கிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்டையில், விக்னேஷிடம் விசாரணை மேற் கொண்டதில், கிருஷ்ணிடம் வாங்கிய பணத்தை யூடியூபர் சவுக்கு சங்கரிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதையத்து விக்னேசை கரூர் நகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த, நிலையில், விக்னேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் புழல் சிறையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருந்து வரும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்காக கரூர் நகர போலீசார் நேற்று அழைத்து வந்து கரூர் கிளை சிறையில் வைத்திருந்தனர்.

 4 நாட்கள் போலீஸ் காவல்

இந்த நிலையில் இன்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரிடம் விசரணை நடத்த 9 நாட்கள் காவல் துறை கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.