தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: தீபாவை தீர்த்துக்கட்ட ரம்யா போட்ட ஸ்கெட்ச்; பக்கத்தில் நெருங்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: தீபாவை தீர்த்துக்கட்ட ரம்யா போட்ட ஸ்கெட்ச்; பக்கத்தில் நெருங்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Jul 09, 2024 04:46 PM IST

Karthigai Deepam: அவன் காவி துணி எல்லாம் கூட போடல, வெள்ளை கலர் ட்ரெஸ் போட்டுதான் சுத்திகிட்டு இருந்தான் என்று சொல்லி, முனீஸ்வரன் பிரசாதத்தை கொடுத்து அனுப்ப, கார்த்திக், இளையராஜா தீபாவை தேடி அலைகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: தீபாவை தீர்த்துக்கட்ட ரம்யா போட்ட ஸ்கெட்ச்; பக்கத்தில் நெருங்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: தீபாவை தீர்த்துக்கட்ட ரம்யா போட்ட ஸ்கெட்ச்; பக்கத்தில் நெருங்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் தீபாவை தேடி வரும் நிலையில், மறுபக்கம் பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

உருண்டு ஓடிய தீபா 

அதாவது, ரம்யா நினைத்தபடியே தீபாவை அந்த டாப்புக்குள் உட்கார வைத்து, ஆணியை அடித்து தள்ளிவிட, தீபா உருண்டு செல்கிறாள். இந்த நிலையில் உடனே தீபா, ரம்யாவை தட்டி என்ன கனவா என்று கேட்க, ரம்யா நாம் கண்டது கனவு என்பதை சுதாரித்து கொண்டு, சமாளிக்கிறாள். மறுபக்கம் கார்த்திக் மற்றும் இளையராஜா என இருவரும், முனீஸ்வரன் கோயில் பூசாரி வீட்டிற்கு வந்து, தீபா சொன்ன சாமியார் குறித்து விசாரிக்கின்றனர்; சாமியாரா அப்படி யாரும் இல்லையே என்று சொல்லும் பூசாரி, பரிகாரத்தை கேட்ட பிறகு, ஆமாம் ஒருத்தன் சாமியார் வேடத்தில் இ���்த பக்கம் சுத்திகிட்டு இருந்தான் என்றார். 

அவன் காவி துணி எல்லாம் கூட போடல, வெள்ளை கலர் ட்ரெஸ் போட்டுதான் சுத்திகிட்டு இருந்தான் என்று சொல்லி, முனீஸ்வரன் பிரசாதத்தை கொடுத்து அனுப்ப, கார்த்திக், இளையராஜா தீபாவை தேடி அலைகின்றனர். மறுபக்கம் பரிகாரத்திற்கான ஏற்பாடுகளை செய்த போலி சாமியார், சீக்கிரம் வாங்க, இருட்டுவதற்குள் பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று அவசரப்படுத்துகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

வாய்ஸ் மேசேஜ் அனுப்பிய தீபா!

அதாவது, ரம்யா கார்த்திக்கை சமாளித்து விட்டு, மீண்டும் காருக்குள் சென்று ஏறினாள். அப்போது தீபா, என்னுடைய புருஷனா போன் பண்ணாரு என்று கேட்க, ரம்யா இல்லை என்று சமாளித்தாள். மறுபக்கம் கார்த்திக், இளையராஜா ஆகியோர் தீபாவை தேடி அலைய, இளையராஜா, தீபா வாய்ஸ் மெசேஜ் செய்திருப்பதை கவனித்து, கார்த்திக்கிடம் சொன்னான். 

உடனே கார்த்திக், அந்த வாய்ஸ் மெசேஜை கேட்டான். அதில், அபிராமிக்கு குணமாகவதற்காக தான் பரிகாரம் செய்ய போவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், அதுக்கு முழுக்க முழுக்க தான்னே பொறுப்பு என்று பேசி இருப்பதை கேட்டதும் ஷாக் ஆனான். 

இது தீபாவாக பேசுன மாதிரி தெரியல, யாரோ இப்படி பேச வச்சிருக்காங்க என்று சந்தேகப்படும் கார்த்திக் கூடிய சீக்கிரமா தீபாவை கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லி, தனது போலிஸ் நண்பருக்கு போன் செய்து, வாய்ஸ் மெசேஜ் எந் டவரில் இருந்து வந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கச் சொன்னான். 

மறுபக்கம், தீபாவும் ரம்யாவும் பரிகாரம் செய்யும் இடத்திற்கு வந்திருக்க, போலி சாமியார் தீபாவை தண்ணீரில் மிதக்க விடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்து பூஜைகளை செய்தான்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.